தமிழும் ஆங்கிலமும்
பனிரெண்டாம் வகுப்பு வரை தமிழ் மீடியம். சென்னை மருத்துவக் கல்லூரியில் சேர்ந்த போது, கண்ணைக் கட்டி காட்டில் விட்டது போல உணர்ந்தேன். புதிய நகர்ப்புற சூழல், ராக்கிங் கொடுமை. இவற்றோடு திரும்புகிற பக்கமெல்லாம் இங்கிலீஷ். இங்கிலீஷ் தான் பயிற்று மொழி, பேச்சு மொழி, நக்கல் மொழி, சிரிப்பு மொழி எல்லாம். அதிர்ச்சியிலிருந்து மீள ஓரிரு வாரங்கள் ஆனது. என்னைப் போலவே சுமார் 25-30 பேர் முகத்திலும் தமிழ் மீடியம் என்று ஸ்டிக்கர் ஒட்டி இருந்தது. எங்களுக்கு முதலாமாண்டு படிப்பு கடினமாகவும் சற்று பயமுறுத்துவதாகவும் இருந்தது. நண்பர்கள், சீனியர்கள் பெரும் உதவியாக இருந்தார்கள். நோட்ஸ்களை கொடுத்து உதவினார்கள். இரண்டாமாண்டு முதல் இறுதியாண்டு வரை ஆங்கிலம் ஒரு பிரச்சினையாக இருக்கவில்லை. அனைத்து தமிழ் மீடிய நண்பர்களும் முதல் தடவையிலேயே இறுதியாண்டுத் தேர்வில் தேர்ச்சி அடைந்தோம். *** ஆரம்பக்கல்வியை தமிழில் படித்தது, பாடங்களை புரிந்துகொண்டு உள்வாங்கிக் கொள்ள பேருதவியாக இருந்ததை பின்னாளில் உணர்ந்து கொண்டேன். அடித்தளத்தை தாய்மொழியில் அமைத்துக் கொள்வது மேலேறுவதற்கு உதவும் முக்கியமான காரணி என்பதில் மாற்றுக் கருத்த...