Posts

கணிதப் புதிர்கள்

Image
நான் படித்துக் கொண்டிருந்த காலத்தில், எனக்கு கணக்கு பாடத்தில் அதிக ஆர்வம் இருந்தது... அது எனது தந்தையார் கொடுத்த ஊக்கத்தால் என்றுக்கூட சொல்லலாம்... கல்லூரில் பி.எஸ்சி கணிதம் தான் பயின்றேன்....இதற்கு இன்னொரு முக்கிய காரணமும் உண்டு, ஆங்கிலம் எனக்கு அறவே வரவில்லை...கணித பாடம் எடுத்தால் ஒரளவுக்கேனும் தப்பித்து கொள்ளலாம் என்றுதான் கணிதம் எடுத்தேன்... கணிதப்பாடம் எனக்கு கொஞ்சம் கூட கடினமாய் இருந்ததில்லை.... ஆனால், பல கணித பிரிவுகள் எதற்கு படிக்கிறோம் ஏன் படிக்கிறோம் என்ன பயன்பாடு என்று புரியாமல் தான் படித்தேன்... குறிப்பாக மேட்ரிக்ஸ் எனும் கணிதப்பிரிவு எதற்கெ என்றே புரியவில்லை....ஆனால் அது எளிதானது.... கணக்கின் மீது மிகுந்த ஆர்வம் ஏற்பட எனது தந்தையார் ஒரு முக்கிய காரணம்.... வீட்டில் விடுமுறை காலங்களில் பிள்ளைகள் ஏதேனும் உபயோகமாக பொழுதை போக்கட்டும் என்று சில கணித புதிர்களை கொடுப்பார் (விடுமுறை நாட்கள் வெளியில் சென்று ஏதேனும் கற்க அப்போது எங்களுக்கு போதிய வசதி வாய்ப்புகள் இல்லை) .... காலையில் வேலைக்கு செல்லும் போது   ஒரு கணித புதிரை சொல்வார் அதற்கு நான், மாலை எனது அப்பா வருவதற்குள் வி...

ஏழு சுவர் சோழ நகரம்

Image
#சுவரேழு_சோழநகரம் Chola City of Seven Walls சோழ நகரம் ஏழு அடி உயரமுள்ள, ஏழு மடங்கு சுவரால் சோழ இராச்சியம் அமைக்கப்பட்டு இருந்ததுள்ளது .  அதாவது முதல் சுவரின் உயரம் 7 அடி, இரண்டாம் சுவர் 14 அடி மூன்றாம் சுவர் 21 அடி, நான்காம் சுவர் 28 அடி, அஞ்சாம் சுவர் 35 அடி ஆறாம் சுவர் 42 அடி ஏழாம் சுவர் 49 அடி. வெளி சுவரின் நீளம் வடக்கிலிருந்து தெற்கு நோக்கி 6 கி.மீ. மற்றும் கிழக்கிலிருந்து மேற்கு நோக்கி 3.5 கி.மீ. ஒவ்வொரு சுவரும் அடுத்தவையிலிருந்து  முக்கால் கிலோமீட்டர் (0.762 கி.மீ.) இடைவெளியில் அமைந்திருந்துள்ளது.  முதல் நான்கு சுவர்கள் கற்களால் ஆனவை,  அடுத்த இரண்டும் மண் சுவர்கள். கடைசி உட்புற சுவர் மரசுவர்.  ஒவ்வொரு சுவரின் இரு புறங்களிலும் பூத்து குலுங்கும் செடிகளும் காய்த்து தொங்கும் மரங்களும் நிரம்பி இருந்துள்ளது #மக்களின்_குடியிருப்புகள்  முதல் இரண்டு சுவருக்குள் மக்கள் வாழ்ந்தனர். அவர்களை சுற்றி அகழி இருக்கிறது  #அமைச்சர்கள்_குடியிருப்புகள்  மூன்றாவது மற்றும் நான்காவது சுவர்களுக்குள் அமைச்சர்கள் வாழ்ந்தனர். #அரசவாரிசுகள்_குடியிருப்புகள்...

எடை குறைப்பும் ஆரோக்கிய வாழ்வியலும்

Image
தேடிச் சோறு நிதந் தின்கிறோம். நேற்று சுவையைத் தந்த  உணவு இன்றும் அதே நிறைவைத் தருவதில்லை. மறுபுறம் நடுத்தர வயதை எட்டும் முன்னரே உடல் உசிலை மணியாட்டம் சதை போட்டு விடுகிறது. இரைக்க இரைக்க ஜாக்கிங், ஜிம் என்று பிட்னஸுக்காக மேற்கொள்ளும் முயற்சியில் பர்ஸ் கரைகிறது, அட்டை தேய்கிறது உடல் இளைத்தபாடில்லை. மனதை வெகுவாகத் தயாரித்துக் கொண்டு இறங்கும் உணவுக் கட்டுப்பாடுகள் அனைத்தும் வார இறுதிவரைக்கும் கூட நீடிப்பதில்லை. இதெல்லாம் ஒத்து வராது என்று இறங்குகிற பேலியோ, வீகன் டயட்டுகள் எந்தளவிற்குப் பாதுகாப்பானது. அவை உடலில் ஏற்படுத்தும் சிக்கல்கள் என்னென்ன என்பதைத் தெளிவாக விளக்குகிறது தோழர் உமர் பாருக்கின் பேலியோ சிக்கல்கள் எனும் நூல். பல்வேறு ஆய்வுத் தரவுகளை முன் வைத்து மரபு மருத்துவ உடலியல் பின்னணியுடன் துல்லியமாக எடுத்துரைக்கிறார். உணவின் வரலாற்று அடிப்படை, கலாச்சார அணுகுமுறை போன்றவற்றை நேர்த்தியாக விளக்குகிறார். முக்கியமாக வணிக மருத்துவம் அவ்வப்போது மிரட்டிக் கொண்டிருக்கும் கொலஸ்ட்ரால், ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் போன்றவற்றை தமக்குத் தாமே முரண்பட்டு அடிக்கும் பல்டிகளின் திரைமறைவு அஜண்டாக்கள் ...

நீ நான்

* *நீங்கள் சிந்திப்பது*   *உங்களுடைய** *சிந்தனையா?...திணிப்பா* ?...*  ஒரு கோட் சூட் போட்ட டிப் டாப் டீசன்ட் ஆசாமி ரோட்டில் ஒரு இடத்தில காரை நிறுத்தி விட்டு ஒரு பெட்டி கடையில் சிகரெட் வாங்கி அடிக்கிறார் என்று வைத்து கொள்ளுங்கள் . அவரை நீங்கள் எப்படி பார்ப்பீர்கள்?. இதில் பார்க்க என்ன இருக்கு ..  நல்லா ஸ்டைலா கம்பீரமா சிகரெட் ஊதரார் அவ்ளோ தான் எனலாம். சரி இப்போ அதே ஆசாமி பெட்டி கடையில் ஒரு கடலை மிட்டாய் வாங்கி பகிரங்கமாய் ரோட்டில் சாப்பிட்டு கொண்டு வருகிறார் என்று வைத்து கொள்ளுவோம். அவரை ஒரு காமெடி பீஸ் போல ..அரை கிறுக்கன் போல பார்ப்போமா இல்லையா.. இப்போ சிந்தித்து பாருங்கள் கடலை மிட்டாய் சிகரெட்டை விட எந்த விதத்தில் தாழ்ந்தது? டாக்டர்கள் தினம் சாப்பிட சொல்லி சிபாரிசு செய்வது கடலை மிட்டாய். அதே டாக்டர் நிறுத்த சொல்லி அட்வைஸ் பண்ணுவது சிகரெட். அப்படி இருக்கையில் சிகரெட் அடிப்பவனை பந்தாவாகவும் கடலை மிட்டாய் சாப்பிடுபவனை தாழ்ந்தவனாக பார்க்கும் அந்த சிந்தனை இருக்கிறதே... அது உங்கள் சிந்தனை அல்ல உங்களிடம் திட்டமிட்டு பெரும் மல்டி நேஷனல் கம்பெனி பெரும் முதலாளிகளால் செலுத்த பட...

இந்திய மக்கள்

ப.பிரபாகரன் ஆரிய முகத்திற்கு சரியான உதாரணம் காஷ்மீர் மக்கள்... மற்ற எல்லா இடங்களில் நான்கு ரேஸ்கள் அதாவது காகசியன், மங்கோலோய்டு, ஆப்ரிகன், ஆஸ்டிரலயிட் விகிதாசாரமாக கலந்து தான் இந்திய மக்கள் ...

வாழ்க்கை என்பது...

*25 வயதிற்குள் வாழ்க்கை முடிந்துவிட்டதா ?* புத்தருக்கு எப்படி போதி மரமோ, ஆண்களுக்கு 25 வயது… பெருவாரியான ஆண்கள் 25 வயதில் முக்தி நிலையை அடைந்து விடுகிறார்கள். அதுதான் முதிர்ச்சி என்ற ஓர் ஆகச் சிறந்த பொக்கிஷம். இதுநாள்வரை இளமைத் துடிப்பில் தான் செய்த தவறுகளின் பிரதிபலனாக, 24லிருந்து 26 வயதிற்குள் அனைத்து ஆண்களும் அன்னப் பறவைகளாக மாறுகின்றனர். அதுதான் தன் வாழ்விற்கு எது தேவை, தேவை இல்லை என்பதனை வகைப் பிரிக்கும் தந்திரம். இதில் தனது இருபதுவயதுகளில் இளைஞர்கள் (ஆண்களும் பெண்களும்) கட்டாயம் அறிந்து கொள்ள வேண்டியதாக நான் நினைப்பது,  *எடுத்துக்காட்டுகளின் பின்னால் ஓட வேண்டாம் என்பதேயாகும்.* நமது வீடு, சமூகம், சமூக வலைதளங்கள், வேலை செய்யுமிடம் என எங்கு பார்த்தாலும் ஆயிரம் எடுத்துக்காட்டுகளை மேற்கோள் காட்டி பதிலளிக்கும் கலாச்சாரம் அதிகமாக உள்ளது. இதற்கு எடுத்துக்காட்டாக ஒரு சிலவற்றை நான் கூறுகிறேன். பில்கேட்ஸ் சாதித்தார், நீயும் சாதிக்கலாம். ஜாக் மா சாதித்தார், நீயும் சாதிக்கலாம். KFC நிறுவனர் 60 வயதில் சாதித்தார், நீயும் எந்த வயதில் வேண்டுமானாலும் சாதிக்கலாம். ஆண்கள் பெண்களை அடக்குமுறை செய்...

பெளத்தமும் விநாயகனும்

சங்க இலக்கியத்திலோ சிலப்பதிகாரத்திலோ விநாயகரைப் பற்றி ஒரு சொல் இல்லை. தமிழகத்தின் மிகப்பழைய விநாயகரான பிள்ளையார்பட்டி தேசிகவிநாயகர் (பல தேசங்களுக்கும் சென்று வர்த்தகம் செய்வோர் தேசிகர். அநேகமாக இன்றைய மகாராட்டிரப் பகுதியிலிருந்து விநாயகர் வழிபாட்டை தேசிகர்கள் கொண்டு வந்திருக்க வேண்டும்) கூட நான்காம் நூற்றாண்டளவினதான புடைப்புச் சிற்பம் தானாம். அதிலும் கூட யானைக்கான கூறுகளே அதிகம் என்கிறார் பேரா.தொ.பரமசிவன்.  பரஞ்சோதியார் வாதாபியைத் தீக்கிரையாக்கி வெற்றிச் சின்னமாகக் கொண்டுவந்து காஞ்சியில் நிறுவிய வாதாபி கணபதியும் மிகப்பழைய விநாயகர் என்கிறார்கள். எதைக் கொண்டு வந்து வைத்தாலும் பஜனை பாட ஒரு கூட்டம் இங்கே உண்டு. "வாதாபி கணபதிம் பஜே" என்ற ஒரு பிரபலமான கீர்த்தனை உண்டு. புத்தர் கடவுளாக்கப்பட்ட பிறகு அவரது பிறப்பை விதந்தோதும் கதைகள் பிறந்தன. அதிலொன்று அவரது தாயார் மாயாதேவியின் வயிற்றில் அவலோகிதரான போதிசத்துவர் ஒரு வெள்ளையானை வடிவில் வந்து கருவாகத் தங்கினார் என்கிறது. இதன் காரணமாக, புத்தம் தழைத்தோங்கிய காலத்தில், அரசமரத்தடியில் யானைச் சிலையை நிறுவி வழிபடும் வழக்கம் இருந்ததாக வரலாற்று ஆ...