ஏழு சுவர் சோழ நகரம்

#சுவரேழு_சோழநகரம் Chola City of Seven Walls

சோழ நகரம் ஏழு அடி உயரமுள்ள, ஏழு மடங்கு சுவரால் சோழ இராச்சியம் அமைக்கப்பட்டு இருந்ததுள்ளது . 

அதாவது முதல் சுவரின் உயரம் 7 அடி, இரண்டாம் சுவர் 14 அடி மூன்றாம் சுவர் 21 அடி, நான்காம் சுவர் 28 அடி, அஞ்சாம் சுவர் 35 அடி ஆறாம் சுவர் 42 அடி ஏழாம் சுவர் 49 அடி.

வெளி சுவரின் நீளம் வடக்கிலிருந்து தெற்கு நோக்கி 6 கி.மீ. மற்றும் கிழக்கிலிருந்து மேற்கு நோக்கி 3.5 கி.மீ.

ஒவ்வொரு சுவரும் அடுத்தவையிலிருந்து  முக்கால் கிலோமீட்டர் (0.762 கி.மீ.) இடைவெளியில் அமைந்திருந்துள்ளது. 

முதல் நான்கு சுவர்கள் கற்களால் ஆனவை, 

அடுத்த இரண்டும் மண் சுவர்கள்.

கடைசி உட்புற சுவர் மரசுவர். 

ஒவ்வொரு சுவரின் இரு புறங்களிலும் பூத்து குலுங்கும் செடிகளும் காய்த்து தொங்கும் மரங்களும் நிரம்பி இருந்துள்ளது

#மக்களின்_குடியிருப்புகள் 

முதல் இரண்டு சுவருக்குள் மக்கள் வாழ்ந்தனர். அவர்களை சுற்றி அகழி இருக்கிறது 

#அமைச்சர்கள்_குடியிருப்புகள் 

மூன்றாவது மற்றும் நான்காவது சுவர்களுக்குள் அமைச்சர்கள் வாழ்ந்தனர்.

#அரசவாரிசுகள்_குடியிருப்புகள் 

ராஜாவின் நான்கு மகன்களும் ஐந்தாவது சுவருக்குள் வாழ்ந்தனர்.

#துறவிகள்_குடியிருப்புகள் 

ஆறாவது சுவர் நூறு மடங்களும் துறவிகளும் வாழ்ந்தனர்.

#அரண்மனை 

ஏழாவது சுவர் ராஜா வசிக்கும் இடம். இதில் நானூறுக்கும் மேற்பட்ட மாளிகைகள் உள்ளன.

முதலாம் ராஜராஜாவின் தலைநகரான தஞ்சாவூரில் தொல்பொருள் அகழ்வாராய்ச்சி #இதுவரை அரண்மனையை கண்டுபிடிக்கவில்லை.

மறுபுறம், ராஜேந்திர சோழன் தலைநகரான கங்கைகொண்டச்சோலபுரத்தில், செவ்வக வடிவத்தில் அரண்மனையைச் சுற்றியுள்ள இரண்டு கல் சுவர்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன

இருப்பினும் முழு கட்டமைப்பும் இன்னும் தெளிவுபடுத்தப்படவில்லை.

இதே ஏழடுக்கு கட்டமைப்பு ஸ்ரீரங்கம் கோவிலிலும் இருப்பது குறிப்பிடத்தக்கது

இவைகள் சீன ஆவணத்தில் இருந்து எடுக்கப்பட்ட தகவல்கள் - Kingdom of #Zhu_nian, Notes from the Chinese #Song_Dynasty (宋朝; pinyin: Sòng cháo; 960–1279) 

சோழம் தொடரும் 

இவண்

தமிழன்.திரு.இங்கர்சால், நார்வே

படம் - ஸ்ரீரங்கம் கோவில்

Comments